…கனவு

நேற்று பார்த்தேன் 
இன்றைய கனவில் நீ!
என்ன ஒரு சிக்கலான மனித மனம்...

பல ஆண்டுகள் உயிரை கொடுத்து 
காக்கும் பெற்றோரையும் 
பல உணர்வுகளை பகிர்ந்து கொண்ட 
உடன் பிறந்தவர்களையும் 
பல நூறு சண்டைகளுக்கு பிறகும் 
நம்மை வெறுக்காமல் 
அரவணைக்கும் நண்பர்களையும் 
நன் கண்டதில்லை கனவில் 

அதுவும் உன்னை போல் 
பார்த்த அடுத்த நாளே

இதற்க்கு என்ன காரணமாய் இருக்ககூடும் 
உனது தோற்றமா 
உனது பெரிய கண்களா
அல்லது உனது விசித்திரமான சிரிப்பா...
என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும் 

ஆனால் ஒன்று...
உன்னை என் கனவில் பார்த்த 
மறு கணமே அதிர்ந்து போய் 
அலறினேன் 
அய்யயோ சந்திரமுகி !!! 

2 responses to “…கனவு

Leave a comment